செவ்வாய் கிரகத்தில் இருந்து தகவல் அனுப்ப முடியாத நிலையில் நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் – என்ன காரணம்?

 

செவ்வாய் கிரகத்தில் இருந்து தகவல் அனுப்ப முடியாத நிலையில் நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் – என்ன காரணம்?

செவ்வாய் கிரகத்தில் இருந்து தகவல் அனுப்ப முடியாத நிலையில் நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் இருந்து தகவல் அனுப்ப முடியாத நிலையில் நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா கடந்த 2011-ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தை ஆராய கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம்  கடந்த 5 வருடங்களாக செவ்வாய் கிரக மாதிரிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு கிரகம் தொடர்பான பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

சுமார் 560 மில்லியன் கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு செவ்வாய் கிரகத்தில் ஆகஸ்ட் 6, 2012 அன்று வெற்றிகரமாக  தரையிறங்கிய கியூரியாசிட்டி விண்கலம் மொத்த பணியில் இதுவரை 23 சதவிகிதத்தை முடித்துள்ளது.

இந்நிலையில், விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அது சேமித்த தகவல்களை பூமிக்கு அனுப்ப முடியாமல் கடந்த சில நாட்களாக கியூரியாசிட்டி தனது இயக்கத்தை நிறுத்தியுள்ளது. இதை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளதாகவும், விண்கலத்தின் சூரிய சக்தியை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.