செல்வராகவானின் அடுத்த படம் யாரு கூட தெரியுமா?

 

செல்வராகவானின் அடுத்த படம் யாரு கூட தெரியுமா?

இயக்குநர் செல்வ ராகவனின் அடுத்த படத்தைப் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. 

சென்னை: இயக்குநர் செல்வ ராகவனின் அடுத்த படத்தைப் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. 

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் செல்வராகவன். இவரின் படங்கள் வெறும் படமாக மட்டும் இல்லாமல், பாடமாகவும் இருந்து வருகிறது. 

அதனாலேயே இவரின் படங்களுக்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கின்றனர். தனது தரமான ஸ்கிரிப்டு மூலம் தமிழ் சினிமாவின் ஜீனியஸ் என்று அழைக்கப்படுகிறார். இவரைத் தான் தற்போது வளர்ந்து வரும் இயக்குநர்கள் அனைவரும் முன்னுதாரணமாக எடுத்து வருகின்றனர். 

கடைசியாக இவர் சூர்யாவை வைத்து என்.ஜி.கே படத்தை இயக்கினார். கமெர்ஷியல் ரீதியாக உள்ளதாகப் படத்தின் வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக தோல்வியைத் தழுவியது. இருப்பினும் அவரது ரசிகர்கள் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு விடுமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். 

தற்போது அவற்றின் அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பைப் பிரபல ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி வாயிலாகக் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘என் அடுத்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். மேலும்  படத்தைத் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கவுள்ளார்’ என்று கூறியுள்ளார். இதை கேட்ட செல்வா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.