செல்போனில் குழந்தைகளின் ஆபாச படங்கள்…சென்னை பட்டதாரி இளைஞர் அதிரடி கைது!

 

செல்போனில் குழந்தைகளின் ஆபாச படங்கள்…சென்னை பட்டதாரி இளைஞர் அதிரடி  கைது!

சென்னை நகர பெண்கள், குழந்தைகள், குற்றத் தடுப்புப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி மேற்கொண்டு வருகிறார். 

குழந்தைகள் ஆபாச படங்களை தனது போனில் டவுன்லோட் குற்றத்திற்காகச் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதாகியுள்ளார். 

கடந்த சில மாதங்களாக  சிறார் ஆபாசப்படங்கள் பார்க்கும் நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையை  சென்னை நகர பெண்கள், குழந்தைகள், குற்றத் தடுப்புப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி மேற்கொண்டு வருகிறார். 

ttn

அந்த வகையில் சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம் விபிசி நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ். 24 வயதாகும் இவர் பி.எஸ்சி கம்ப்யுட்டர் சயின்ஸ் படித்துள்ளார்.  இவர்  குழந்தைகள் தொடர்பான ஆபிஸ படங்களை பார்த்து வந்ததுடன், அதை போனில் பதிவிறக்கம் செய்து வைத்தது போலீசாருக்கு தெரியவந்தது.  இதுகுறித்து போலீசார் ஷரிஷை  கைது செய்து விசாரணை நடத்தினர்.

ttn

அதில், கடந்த 2 ஆண்டாக   குழந்தைகள் ஆபாச படம் பார்த்து வந்தது தெரியவந்தது.  இதை தொடர்ந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹரிஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்  சிறையில் அடைத்தனர்.