செல்போனால் சிதறிய கவனம்: வாளி நீரில் மூழ்கி உயிரிழந்த குழந்தை!

 

செல்போனால் சிதறிய கவனம்:  வாளி நீரில் மூழ்கி  உயிரிழந்த குழந்தை!

திருவள்ளூர் மாவட்டம் வெங்கால் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு அருண் என்ற ஒன்றரை வயது மகன் உள்ளார்

திருவள்ளூர் : வாளி நீரில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

baby

திருவள்ளூர் மாவட்டம் வெங்கால் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு அருண் என்ற ஒன்றரை வயது மகன் உள்ளார். வழக்கமாக குழந்தையை முருகன் வாளியில் வைத்து குளிப்பாட்டுவது வழக்கம். 
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் குழந்தை அருணை குளிக்க வைக்க வாளியில்  நீரை நிரப்பியுள்ளார். அப்போது குழந்தை அருகில் நின்று கொண்டிருந்தது. அப்போது முருகனுக்கு போன் வந்துள்ளது. இதனால் முருகன் போனை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். முருகனின் மனைவியும் சமையலறை வேலையில் இருந்துள்ளார். 

police

அப்போது குழந்தை அருண்   நீர் நிரம்பிய வாளி நீரில் மூழ்கி உயிருக்குப் போராடியுள்ளான். முருகன் குழந்தையை அழைத்தபோது எந்தச் சத்தமும் வராத நிலையில் முருகன் ஓடிச் சென்று பார்த்துள்ளார். அங்கு உயிருக்குப் போராடிய நிலையில் இருந்துள்ளது. உடனே குழந்தையை மீட்ட முருகன் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்துள்ளார். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து  வருகின்றனர்.