செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்: அரசு தேர்வு துறை இயக்குனர்

 

செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்: அரசு தேர்வு துறை இயக்குனர்

பிளஸ் 2 செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழக அரசு தேர்வு துறை இயக்குனர் கூறியுள்ளார்.

சென்னை: பிளஸ் 2 செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழக அரசு தேர்வு துறை இயக்குனர் கூறியுள்ளார்.

பள்ளி ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக அரசு தேர்வு துறை பணியாளர்களும் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என எச்சரித்திருந்தும் அவர்களது போராட்டம் தொடர்கிறது. இதற்கிடையே நேற்று மாலைக்குள் பணிக்குத் திரும்பும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

இந்நிலையில் வருகிற 1-ம் தேதி முதல் பிளஸ் 2 செய்முறை தேர்வு நடைபெற இருக்கிறது. ஆனால் ஆசிரியர்கள், தேர்வுத்துறை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் செய்முறை தேர்வில் பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்தது. 

இதுகுறித்து  அரசு தேர்வு துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி கூறும்போது,பிளஸ் 2 செய்முறை தேர்வு ஏற்கனவே அறிவித்த நாட்களில் திட்டமிட்டபடி நடக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.