சென்னை விமான நிலையத்துல இனிமே நாராயண சாமி வாய்க்குள்ள ரிப்போர்ட்டஸ் மைக்கை விடமுடியாது!

 

சென்னை விமான நிலையத்துல இனிமே நாராயண சாமி வாய்க்குள்ள ரிப்போர்ட்டஸ் மைக்கை விடமுடியாது!

சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஏர் ஷபா விமான நிறுவனம், புதுச்சேரியிலிருந்து, விஜயவாடா வழியாக டெல்லிக்கு தினசரி விமான சேவையை தொடங்க முன்வந்துள்ளது. இதனை உறுதி செய்துள்ள புதுச்சேரி விமான நிலைய அதிகாரிகள், இந்த சேவை தீபாவளி அல்லது நடப்பாண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது.

புதுச்சேரியிலிருந்து பெங்களூர், ஐதராபாத் ஆகிய இடங்களுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வந்தாலும், தலைநகர் டெல்லிக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை வெகு குறைவு. எனவே, சுற்றுலா மற்றும் தொழில்வளத்தை மேம்படுத்த, புதுவையிலிருந்து டெல்லிக்கு விமான சேவையை அதிகரிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

Puducherry Airport

இந்நிலையில், சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஏர் ஷபா விமான நிறுவனம், புதுச்சேரியிலிருந்து, விஜயவாடா வழியாக டெல்லிக்கு தினசரி விமான சேவையை தொடங்க முன்வந்துள்ளது. இதனை உறுதி செய்துள்ள புதுச்சேரி விமான நிலைய அதிகாரிகள், இந்த சேவை தீபாவளி அல்லது நடப்பாண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது. ஆகவே, இனிமேல் சென்னை விமான நிலைய செய்தியாளர்கள், புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி வாய்க்குள் மைக்கை விட்டு கிண்டுவது குறையும் என எதிர்பார்க்கலாம்.