சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் மாடியில் இருந்து பள்ளி மாணவன் பலி

 

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் மாடியில் இருந்து பள்ளி மாணவன் பலி

சென்னை கோயம்பேடு (சிஎம்பிடி) மெட்ரோ ரயில் நிலையம் பேருந்து நிலையத்திற்குள் செயல்பட்டு வருகிறது. இன்று மாலை மெட்ரோ ரயில் நிலையத்தின் முதல் மாடியில் இருந்து திடீரென பள்ளி மாணவன் ஒருவன் விழுந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது.

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தின் முதல் மாடியிலிருந்து பள்ளி மாணவன் விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேடு (சிஎம்பிடி) மெட்ரோ ரயில் நிலையம் பேருந்து நிலையத்திற்குள் செயல்பட்டு வருகிறது. இன்று மாலை மெட்ரோ ரயில் நிலையத்தின் முதல் மாடியில் இருந்து திடீரென பள்ளி மாணவன் ஒருவன் விழுந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது. உடனடியாக மெட்ரோ ஊழியர்கள் சிஎம்பிடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய மாணவனை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்து போனான்

இது தொடர்பாக சிஎம்பிடி போலீசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்தது தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகன் ஸ்ரீவந்த் அருண் என்பது தெரியவந்தது. சேத்துப்பட்டில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்ததாகவும் பள்ளிச்சீருடையிலே விழுந்தாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மாணவன் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.