சென்னை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை!

 

சென்னை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை கோயம்பேடைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு நெற்குன்றத்தைச் சேர்ந்த கென்னடி முருகன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2014-ம் ஆண்டு கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கட்டது.

அதனையடுத்து, கென்னடி முருகன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கென்னடி முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.