சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்றும் 6 மருத்துவருக்கு கொரோனா!

 

சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்றும் 6 மருத்துவருக்கு கொரோனா!

கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதன் காரணமாக மருத்துவக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக தீவிரமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுடன் பயிற்சி பெறும் மருத்துவர்களும் வீட்டுக்குச் செல்லாமல் விடுதியில் தங்கி பணிபுரிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

coronavirus

இந்நிலையில் சென்னை கேகே நகர் பகுதியில் இயங்கிவரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்றி வந்த பயிற்சி மருத்துவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 பெண் பயிற்சி மருத்துவர்கள், 2 ஆண் மருத்துவர்களாவர். இதேபோல் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆண்கள் விடுதியில் காவலராக பணியாற்றி வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.