சென்னை ஐஐடி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!

 

சென்னை ஐஐடி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை ஐ.ஐ.டியில்  மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: சென்னை ஐ.ஐ.டியில்  மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐ.ஐ.டியில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதான ரஞ்சனாகுமாரி, முதுநிலை இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பில் படித்து வந்தார். சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள சபர்மதி விடுதியில் தங்கி படித்துவந்த அவர், கடந்த 2 தினங்களாக பெற்றோரைத் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், விடுதி பாதுகாப்பு ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். 

மாணவி தங்கியிருந்த அறைக்கு சென்று ஊழியர்கள் பார்த்தபோது, அறைக் கதவு பூட்டப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அறையிலேயே மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து தகவலறிந்து வந்த கோட்டூர்புரம் போலீஸார், மாணவியின் சடலத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  மாணவியின் தற்கொலை குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.