சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கனமழை!

 

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கனமழை!

சென்னையில் நேற்றிரவு அண்ணா சாலை, அண்ணா நகர், கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், மெரினா கடற்கரை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

சென்னை:  வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்  தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பரவலாக மழை பெய்தது. 

rain

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்றிரவு அண்ணா சாலை, அண்ணா நகர், கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், மெரினா கடற்கரை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.  இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

rain

மதுரையில் பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்றங்கரையை ஒட்டிய தார்ச்சாலையில் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதேபோல் திருவாரூர், திருப்பூர், நெல்லை, தென்காசி, கோவை ஆகிய  இடங்களில் தொடர்ந்து ஐந்து நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால்  நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.