சென்னை அசோக் நகர் 11வது தெருவில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று!

 

சென்னை அசோக் நகர் 11வது தெருவில்  மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று!

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3550லிருந்து 4058 ஆக உயா்ந்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில்  2008பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36 லட்சத்தை கடந்துள்ளது. 

இந்தியாவை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு 49,333 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3550லிருந்து 4058 ஆக உயா்ந்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில்  2008பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் சென்னை அசோக் நகர் 11வது தெருவில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்று காய்கறி வாங்கியவர்கள் மற்றும் அதே பகுதியில் தற்காலிக பகுதியில் காய்கறி வாங்கியவர்கள் என மேலும்  14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 


முன்னதாக அங்கு 11 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது அங்கு கூடுதல் எண்ணிக்கையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.