சென்னையில் 2600ஐ எட்டிய கொரோனா பாதிப்பின் மண்டலவாரி விவரம்!

 

சென்னையில் 2600ஐ எட்டிய கொரோனா பாதிப்பின் மண்டலவாரி விவரம்!

சென்னையில்  பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 56,342 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,886 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5500ஐ நெருங்கி வருகிறது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2600ஐ எட்டியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு பெருமளவு உயர்ந்ததன் முக்கிய காரணம் கோயம்பேடு சந்தையில் கொரோனா வைரஸ் பரவியது தான். அதனால் சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே சென்னையில்  பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. 

ttn

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மண்டலவாரியான விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரத்தில் 422 பேரும் , தண்டையார்பேட்டையில் 184 பேரும் , திரு.வி.க நகரில் 448 பேரும் , அண்ணா நகரில் 206 பேரும் , தேனாம்பேட்டையில் 361 பேரும் , கோடம்பாக்கத்தில் 461 பேரும்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மொத்தமாக 2644 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.