சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் பலி: 2 மாநகராட்சி அதிகாரிகள் சஸ்பெண்ட்!

 

சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் பலி: 2 மாநகராட்சி அதிகாரிகள் சஸ்பெண்ட்!

சென்னை புளியந்தோப்பு அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை புளியந்தோப்பு அருகே அலிமா(45) என்ற பெண் நேற்று காலை தான் வேலை செய்யும் வீட்டிலிருந்து, கையில் உணவுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் அலிமா வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வழியில் மழை நீர் தேங்கியிருந்தது. அங்கு, மண்ணுக்கு அடியில் செல்லும் மின்சார ஒயர் ஒன்றில் மின்கசிவு ஏற்பட்டு வெளியே மழை நீருக்கு அருகே கிடந்தது.

சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் பலி: 2 மாநகராட்சி அதிகாரிகள் சஸ்பெண்ட்!

அதனை கவனிக்காத அமலா, மின் ஒயரை மிதித்ததால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அமலா உயிரிழந்ததன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பேசிய மின்வாரியம், இந்த சம்பவத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் இதற்கு அப்பகுதி மின்வாரிய ஊழியர்களே பொறுப்பு என்றும் தெரிவித்தது. இந்த நிலையில்,புளியந்தோப்பில் மின்சாரம் பாய்ந்து அலிமா உயிரிழந்தது தொடர்பாக 2 மாநகராட்சி அதிகாரிகளை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.