சென்னையில் மழை தொடரும்; சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 

சென்னையில் மழை தொடரும்; சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னையில் இன்று இரவும், நாளையும் விட்டு விட்டு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: சென்னையில் இன்று இரவும், நாளையும் விட்டு விட்டு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று இரவு முதல் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. பிறபகல சமயத்தில் லேசாக விட்டிருந்த மழை, மாலை முதல் மீண்டும் பெய்து வருகிறது.

இதனால் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புவோர் மற்றும் இரவு பணிக்காக அலுவலகம் செல்வோர் என பலரும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளின் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.