சென்னையில் நாளை அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும்!
Mar 21, 2020, 11:43 IST1584771188000
பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க நாளை இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது.
பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க நாளை இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது. அதன் படி தமிழகத்தில் அரசு பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், காய்கறி கடைகள், பால் விநியோகம் என ஏதும் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் அறிவித்துள்ளார். அம்மா உணவகங்களில் தினந்தோறும் நூற்றுக் கணக்கான மக்கள் உண்டு பயனடைந்து வருவதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.