சென்னைக்கு படையெடுக்கும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்: அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

 

சென்னைக்கு படையெடுக்கும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்: அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

திமுகவில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை: திமுகவில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முன்னாள் அமைச்சரும், அமமுக கட்சியின் மாநில அமைப்புச் செயலாளராகவும் இருந்த செந்தில் பாலாஜி, ஓரிரு நாட்களில் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டிடிவி தினகரிடம் ஏற்பட்ட மனக்கசப்பையடுத்து, திமுகவில் இணையும் முடிவுக்கு செந்தில் பாலாஜி வந்திருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

senthil balaji

திமுகவில், செந்தில்பாலாஜி இணையும் பட்சத்தில், அது இருவருக்குமே சாதகமாக தான் அமையும். ஏனெனில், கொங்கு மண்டலத்தில் போதிய செல்வாக்கு இல்லாமல் தவிக்கும் திமுகவிற்கு, செந்தில் பாலாஜியின் தனிப்பட்ட செல்வாக்கு கைக்கொடுக்கும்.

k n nehru

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் இணைப்பு குறித்து முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட திமுக செயலாளருமான கே.என்.நேரு, கரூர் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் ஆகியோருடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

mk stalin

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த ஆலோசனையில், திமுக தலைமை நிர்வாகிகள் பலரும் இடம்பெற்றுள்ளனர். இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் கரூரிலிருந்து படையெடுக்க தொடங்கியுள்ளனர்.