செந்தில் பாலாஜி திமுகவில் இணைகிறாரா? ஆ.ராசா அந்தர் பல்டி

 

செந்தில் பாலாஜி திமுகவில் இணைகிறாரா? ஆ.ராசா அந்தர் பல்டி

செந்தில் பாலாஜி திமுகவில் இணைவது குறித்த எந்த தகவலும் தனக்கு தெரியாது என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

சென்னை: செந்தில் பாலாஜி திமுகவில் இணைவது குறித்த எந்த தகவலும் தனக்கு தெரியாது என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், அமமுக கட்சியின் மாநில அமைப்புச் செயலாளராகவும் இருந்த செந்தில் பாலாஜி, ஓரிரு நாட்களில் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டிடிவி தினகரிடம் ஏற்பட்ட மனக்கசப்பையடுத்து, திமுகவில் இணையும் முடிவுக்கு செந்தில் பாலாஜி வந்திருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுகவில், செந்தில்பாலாஜி இணையும் பட்சத்தில், கொங்கு மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கு அதிகரிக்கும் என திமுக தலைமை கருதியுள்ளது. அதன் அடிப்படையில், அந்த அசைன்மெண்ட் ஸ்டாலினின் வலதுகரமாக செயல்பட்டு வரும் ஆ.ராசாவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அதை அவர் கச்சிதமாக நிறைவேற்றியதாகவும் நேற்று தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, விமான நிலையத்தில் ஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி நடந்து வருவது போன்ற புகைப்படம் ஒன்று நேற்று வைரலானது.

rasa

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, “செந்தில்பாலாஜியுடன் இருப்பதுபோன்ற புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டது இல்லை. செந்தில்பாலாஜி திமுகவில் இணைவது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது” என தெரிவித்துள்ளார்.