சூர்யா 38 திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் 

 

சூர்யா 38 திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் 

நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் ‘சூர்யா 38’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் ‘சூர்யா 38’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். அப்படம் வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் அடுத்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.அதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘என்ஜிகே’ படம் மே 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு ‘இறுதிச்சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார். மேலும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில் ‘சூர்யா 38 படத்தின் இறுதி ஆடியோ வேலைகள் நடந்து வருவதாகவும்,விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்’ என்று பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: ஆனாலும் இவ்வளவு சிம்பிள் ஆகாது தல! வைரலாக்கும் புது வீடியோ!