சூரியனால் தாமரை பொசுக்கப்படும்! – கவிஞர் சல்மா 

 

சூரியனால் தாமரை பொசுக்கப்படும்! – கவிஞர் சல்மா 

டெல்லி கிழக்கு பா.ஜ.க எம்.பி-யும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் கூறுகையில், “நாங்கள் முயற்சி செய்தோம். ஆனாலும் டெல்லி மாநில மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையின் கீழ் டெல்லி வளர்ச்சி பெறும் என்று நம்புகிறேன்” என்றார்.

டெல்லியில் ஆம் ஆத்மி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து பலரும் ஆம் ஆத்மிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். 
தி.மு.க-வைச் சேர்ந்த கவிஞர் சல்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஆம் ஆத்மி விளக்குமாற்றினால் துடைத்தெறியப்பட்ட தாமரை இங்கு சூரியனால் பொசுக்கப்படும்” என்று கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து சல்மா ட்வீட் செய்துள்ளார். 

தி.மு.க எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள ட்வீட்டில் வெறுப்பு அரசியலுக்கு நோ சொல்லப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

டெல்லி கிழக்கு பா.ஜ.க எம்.பி-யும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் கூறுகையில், “நாங்கள் முயற்சி செய்தோம். ஆனாலும் டெல்லி மாநில மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையின் கீழ் டெல்லி வளர்ச்சி பெறும் என்று நம்புகிறேன்” என்றார்.

gautam-gambhir