சுர்ஜித் நலமுடன் வரவேண்டும்: நடிகர் தாமு பிரார்த்தனை!

 

சுர்ஜித் நலமுடன் வரவேண்டும்: நடிகர் தாமு பிரார்த்தனை!

4 வது நாளாக அவனை மீட்கும் போராட்டத்தில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி:  குழந்தை சுர்ஜித்தை மீட்க போராடி வரும் நிலையில் நடிகர் தாமு குழந்தை நலமுடன் திரும்ப  பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்.

5 ஆண்டுகளுக்கு முன்பு 600 அடிக்கு தோண்டப்பட்டுக் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறு ஒன்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் பற்றி  தான் ஒட்டுமொத்த தமிழகமே கவலை கொண்டுள்ளது.  கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுர்ஜித் அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில்  விழுந்த நிலையில் 4 வது நாளாக அவனை மீட்கும் போராட்டத்தில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அமைச்சர்களும் விடிய விடிய மீட்பு பணிகளைப் பார்வையிட்டு வருகின்றனர். 

surjith

தற்போது 88 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தை இன்னும் ஆழத்திற்குச் செல்லாமல் இருக்க, ஏர் லாக் மூலம் குழந்தையின் கை பிடித்து வைக்கப்பட்டுள்ளது. ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் கொண்டு வரப்பட்டு  துரிதமாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிக திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் ராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பாறைகள் குறுக்கிடுவதால் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மீட்பு படையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

dhamu

இந்நிலையில்  நடிகர் தாமு, குழந்தை மீட்புப் பணி நடைபெறும்  வரும் நடுக்காட்டுப்பட்டிக்கு வருகை புரிந்தார். அங்கு ஓரமாக ஒரு இடத்தில் அமர்ந்த அவர் குழந்தைக்காகப் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார். தாமு போன்று பலரும் குழந்தை சுர்ஜித் மீண்டு வர பிரார்த்தித்து வருகின்றனர்.