சுரேஷ் ரெய்னாவுக்கு அறுவைச் சிகிச்சை!
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
நெதர்லாந்து: இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவராக விளங்குபவர் சுரேஷ் ரெய்னா. அதனால் தான் சுரேஷ் ரெய்னாவுக்கென தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இருப்பினும் சுரேஷ் ரெய்னாவுக்கு சில ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாட இடம் கிடைக்கவில்லை. இதனால் அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
Mr Suresh Raina underwent a knee surgery where he had been facing discomfort for the last few months. The surgery has been successful and it will require him 4-6 week of rehab for recovery.
We wish him a speedy recovery ? pic.twitter.com/osOHnFLqpB
— BCCI (@BCCI) August 9, 2019
இந்நிலையில் சில மாதங்களாக சுரேஷ் ரெய்னா இடது முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சுரேஷ் ரெய்னாவுக்கு நேற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. இதனால் ஆறு வாரங்கள் வரை அவர் ஓய்வெடுக்கவுள்ளார். இதை இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.