சுந்தரபாண்டியன் இயக்குநருக்கு பிறந்த சுந்தரன்!

 

சுந்தரபாண்டியன் இயக்குநருக்கு பிறந்த சுந்தரன்!

பிரபல இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சென்னை: பிரபல இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
தமிழ் சினிமாவில் சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஆர். பிரபாகரன். அப்படத்தை தொடர்ந்து இது கதிர்வேலன் காதல்,சத்ரியன் போன்று பல படங்கள் இயக்கியுள்ளார். தற்போது இவர் சசிகுமார் நடிக்க ‘கொம்பு வெச்ச சிங்கம்டா’ படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் மகேந்திரன் கடைசியாக நடித்துள்ள படமும் இதுதான்.

director

இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கும் திவ்யா என்பவருக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில்,விஷால்(4வயது) மகன் உள்ளார்.இவரது மனைவியை சில நாட்களுக்கு முன்பு,மதுரை கே.கே.நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்.

director

 
அது குறித்து தனது முகநூல் பக்கத்தில் ‘காத்திருப்பது என்பது ஒருவிதமான பிரசவ வலிதான்…!என் இரண்டாவது குழந்தையின் வரவுக்காக உண்மையான பிரவச வலியோடு என் மனைவியும், காத்திருப்பு எனும் பிரவச வலியோடு நானும் காத்திருக்கும் கணங்கள் கனமானவைகள்தான்.’ என்று குறிப்பிட்டிருந்தார்.அதற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

srprabhakaran

இன்று பிற்பகல் இரண்டு 2 மணி அளவில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.சுக பிரசவம் என்பதால் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்.

இதையும் படிங்க: கர்ப்பத்துடன் நீச்சல் அடிக்கும் சூர்யா பட நாயகி – வைரலாகும் புகைப்படம்