சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு: வயல் வழியாக சடலத்தை தூக்கி செல்லும் அவலம்!

 

சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு: வயல் வழியாக சடலத்தை தூக்கி செல்லும் அவலம்!

திருவள்ளூரை அடுத்த செஞ்சிபானம்பாக்கம் ஊராட்சியில் சுமார் 1000ற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

திருவள்ளூர்: சுடுகாடு இல்லாததால் இறந்தவர் உடலை வயல் வழியாக எடுத்து செல்லும் அவலம் திருவள்ளூரில் அரங்கேறியுள்ளது. 

 

திருவள்ளூரை அடுத்த செஞ்சிபானம்பாக்கம் ஊராட்சியில் சுமார் 1000ற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் யார் இறந்தாலும் அவர்களை பானம்பாக்கத்தில்  உள்ள இடுகாட்டிற்கு கொண்டுசெல்வது வழக்கம். ஆனால் சுடுகாட்டிற்கு செல்லும் வழியை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் விளைநிலங்களில் இறங்கி மக்கள் இறந்தவர் உடலை கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலருக்கு மனு கொடுத்ததும் எந்த பயனும் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

 

இதனால் காலதாமதம் செய்யாமல் சுடுகாட்டுக்கு செல்லும் பாதைக்கு தீர்வு கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.