சுடுகாட்டிற்கு தூக்கிச்சென்று சிறுமியிடம் அத்துமீறிய வேன் டிரைவர்….நிர்வாணமாக அடித்து துவைத்த பொதுமக்கள்!
சுடுகாட்டிற்கு கடத்தி சென்று அங்குள்ள முட்புதரில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். ஆனால் சிறுமி கத்தி கூச்சலிடவே அப்பகுதி வாசிகள் அங்கு வந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் அமராவதி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சிவா என்பவர் பள்ளியில் வேன் டிரைவராக உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சிவா தனியாக நின்றுகொண்டிருந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை அருகிலிருந்த சுடுகாட்டிற்கு கடத்தி சென்று அங்குள்ள முட்புதரில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். ஆனால் சிறுமி கத்தி கூச்சலிடவே அப்பகுதி வாசிகள் அங்கு வந்துள்ளனர்.
சிறுமியிடம் சிவா தவறாக நடந்து கொண்டதை பார்த்த அவர்கள் சிவாவிடமிருந்து சிறுமியை மீட்டதுடன் அவரை சரமாரியாக அடித்துள்ளனர். மேலும் பள்ளி வேனை கொளுத்தியதுடன் டிரைவர் சிவாவை நிர்வாணமாகச் சாலையில் அடித்து இழுத்து சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பொதுமக்களிடமிருந்து வேன் டிரைவரை மீட்டு அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.