சுசீந்திரம் தாணுமாலயசாமி கோயிலில் கருட சேவை!

 

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோயிலில் கருட சேவை!

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோயிலில் மார்கழி திருவிழாவின் கருட தரிசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி: 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோயிலும் ஒன்று. இந்த கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி திருவிழா 10 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

shiva

இந்த ஆண்டுக்கான மார்கழித்திருவிழா வருகிற 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5-ம் திருவிழாவான நேற்று அதிகாலை கருட தரிசன நிகழ்ச்சி 

இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயிலில் இருந்து ரிஷப வாகனத்தில் உமா மகேஸ்வரரும், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும், கருட வாகனத்தில் பெருமாளும் மற்றும் உற்சவ மூர்த்திகளும் வெளியே வந்தனர். 

இந்த கோயிலில் நடைபெறும் கருட சேவையினை அத்திரி முனிவரும், அனுசுயா தேவியாரும் கருட வடிவில் வந்து தாணுமாலய சாமியை வணங்கியதாக ஐதீகம்.

garuda sevai

இந்த நிகழ்ச்சியை காண நேற்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரத்தில் கூடினர். அவர்கள் கருட தரிசன நேரத்தில் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

வருகிற 22 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், விநாயகர் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன.

suchindhram

அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவர். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட நிர்வாகமும், கோவில் பணியாளர்களும், சுசீந்திரம் தெய்வீக இயல் இசை நாடக சங்கத்தினரும் இணைந்து சிறப்பாக செய்து வருகின்றனர்.