சீமானை போல ஏன் பேசினார் நெல்லை கண்ணன்… காரணம் இதுதான்..!

 

சீமானை போல ஏன் பேசினார் நெல்லை கண்ணன்… காரணம் இதுதான்..!

காமராஜரை கடவுள் அளவுக்கு மதிப்பவர். அவரிடம் இருந்து கண்ணியத்தையும், அரசியல் நாகரிகத்தையும், துளியளவும் கற்கவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை விமர்சித்துப் பேசிய, இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் நேற்று காவல்துறையினரால் பெரம்பலூரில்  கைது செய்யப்பட்டார்.

நெல்லை கண்ணன் ஒரு நல்ல படிப்பாளி, மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர், கண்ணியமான பட்டிமன்ற நடுவர், திருக்குறளை கரைத்து குடித்தவர், மடைதிறந்த வெள்ளம் போல தமிழ் செய்யுள்களை அள்ளி வீசுபவர், தீவிர காங்கிரஸ் அபிமானி. காமராஜரை கடவுளாக பார்ப்பவர்.nellaikannan

காந்தி மீதும் நேரு குடும்பத்தின் மீதும் கண்மூடித்தனமான பாசம் கொண்டவர். அதுவே அவரை இந்தளவுக்கு கண்மூடித்தனமாக பேச வைத்திருக்கிறது. என்ன ஒன்று காமராஜரை கடவுள் அளவுக்கு மதிப்பவர். அவரிடம் இருந்து கண்ணியத்தையும், அரசியல் நாகரிகத்தையும், துளியளவும் கற்கவில்லை.

திருக்குறளையும், தமிழையும் உணர்ந்து கற்கவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது. இந்த வயதுக்கும், அனுபவத்துக்கும், பக்குவத்துக்கும் சற்றும் பொருத்தமில்லாத கண்ணியமற்ற பேச்சு. நாம் தமிழர் சீமானுக்கும் இவருக்கும் இப்போது ஒரு வித்தியாசமும் இல்லை. இவரிடம் இருந்து இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.