சீனாவில் கொரோனானா! தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல்!!- சுகாதாரத்துறையின் பகீர் அறிக்கை

 

சீனாவில் கொரோனானா! தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல்!!- சுகாதாரத்துறையின் பகீர் அறிக்கை

ஜனவரி 1 முதல் பிப்ரவரி 1 வரையிலான  ஒரு மாதத்தில் மட்டுமே தமிழகத்தில் 132 பேருக்கு  பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புள்ளி விவர அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜனவரி 1 முதல் பிப்ரவரி 1 வரையிலான  ஒரு மாதத்தில் மட்டுமே தமிழகத்தில் 132 பேருக்கு  பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புள்ளி விவர அறிக்கை வெளியிட்டுள்ளது.

2009, 2010 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். 100 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் இருந்தன. சுகாதாரத்துறையின் தொடர் நடவடிக்கைகளால் இந்நோய் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நடப்பு ஆண்டின் தொடக்கத்திலேயே இந்நோயின் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் தமிழகத்தில் 1038 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

swine flu

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களிடமிருந்து 1 மீட்டர் தள்ளி இருக்க வேண்டும் என்றும் சளி, இருமல்,  காய்ச்சல்,  வயிற்றுப்போக்கு,  தலைவலி, தொண்டை வலி இருப்பின் அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.  பன்றிக்காய்ச்சலை தடுக்க தேவையான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அச்சம் தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.