சீனரை போன்று இருந்த வடமாநில பெண்ணை ‘கொரோனா’எனக்கூறி அசிங்கப்படுத்திய கொடுமை
நாடு முழுவதும் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 450-ஐ கடந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா பரவுதலைத் தவிர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், டெல்லியில் நடந்து சென்றுக்கொண்டிருக்கும்போது கொரோனா எனக்கூறி அவமானப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் விஜய் நகர் பகுதியில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த அந்த பெண்ணின் மீது புகையிலை எச்சிலையும் துப்பி அசிங்கப்படுத்தியுள்ளனர். அந்த பெண் சீனர் போல இருந்ததே இதற்கு காரணம்.
பொதுவாக வடகிழக்கு மாநிலத்திலுள்ளவர்கள் பார்ப்பதற்கு சீனர்கள் போலவே இருப்பார்கள். இதனால் அவர்கள் வெளியில் செல்லும்போது அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். டெல்லியில் மணிப்பூர் மாநில பெண்ணை கொரோனா என்று அழைத்தவர் மீது 509-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.