சீச்சீ… கணவர் பெயரை அந்த இடத்தில் பச்சை குத்திய சமந்தா! 

 

சீச்சீ… கணவர் பெயரை அந்த இடத்தில் பச்சை குத்திய சமந்தா! 

நடிகை சமந்தா இத்தனை நாட்கள் மறைத்து வைத்திருந்த டாட்டூவை காட்டியுள்ளார். 

சென்னை: நடிகை சமந்தா இத்தனை நாட்கள் மறைத்து வைத்திருந்த டாட்டூவை காட்டியுள்ளார். 

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்துக் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். பிறகு திருமணம் முடிந்த கையோடு நாக சைதன்யாவும், சமந்தாவும் அவரவர் படங்களில் நடிக்க சென்று விட்டனர். 

திருமணத்திற்குப் பிறகு சமந்தாவிற்கு அதிகமாக பட வாய்ப்புகள் குவிகிறது என்று கூட சொல்லலாம். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஓ பேபி திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதையொட்டி படத்தின் சக்சஸ் மீட் நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. அதில் சமந்தா வெள்ளை நிற உடையில் அழகாக வந்திருந்தார். சக்சஸ் மீட்டிற்கு முன்பு நடத்தப்பட்ட போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சமந்தா, இதுவரை மறைத்து வைத்திருந்த டாட்டூவை காண்பித்துள்ளார். 

அவர், தனது கணவர் நாக சைதன்யாவின் பெயரைத் தான் டாட்டூ குத்தி அதை மறைத்து வைத்துள்ளார். டாட்டூ குத்திய இடம் அப்படி என்பதால் அனைவருக்கும் காட்ட முடியவில்லை போல . சமந்தாவின் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சீச்சீ… கணவர் பெயரைப் பச்சை குத்த வேற இடமே கிடைக்கவில்லையா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.