சிவகார்த்தியின் ‘டாக்டர்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!
‘கோலமாவு கோகிலா’ படத்தின் இயக்குநர் நெல்சன், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார்.
சிவகார்த்திகேயன் கடைசியாக நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இயக்குநர் நெல்சன், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார்.
கே.ஜி.ஆர் பிலிம்ஸ் நிறுவனம், சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. ‘டாக்டர்’ எனப் பெயரிட்டுள்ள இந்தப் படத்தில் நடிகை பிரியங்கா, வினய், யோகி பாபு, இளவரசு, அர்ச்சனா, ‘கோலமாவு கோகிலா’ டோனி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய கார்த்திக் ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார்.
இந்நிலையில் டாக்டர் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சன் , யோகி பாபு , வினய், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனர் கே.ஜே.ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Auspicious beginning to a wonderful film! Our second with the talenthouse @Siva_Kartikeyan and our dearest @Nelson_director ?? #DOCTOR ???⚕️ on floors from today! @anirudhofficial @SKProdOffl @KalaiArasu_ @EzhumalaiyanT @DoneChannel1 @proyuvraaj @gobeatroute pic.twitter.com/HugPmz4o83
— KJR Studios (@kjr_studios) December 6, 2019
ஆக்ஷன், த்ரில்லர், காமெடி என ஃபுல் எண்டர்டெயின்மெண்ட்டாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோவாவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படம் அடுத்தாண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.