சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

 

சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

அக்னி நட்சத்திர வெயில் முடிந்து என்று சொன்னாலும் வழக்கத்தைவிட அதிகமாகவே வெயில் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. ஊரடங்கால் மக்கள் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடப்பதால் ஓரளவு பாதுகாப்பாக இருக்கின்றனர். 

இந்நிலையில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான திருத்தங்கல், சித்துராஜபுரம், பாறைப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, சாட்சியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாலையிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்துவந்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

rain-78

முன்னதாக தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது.