சில்மிஷம் செய்த ஆசாமிகளை அடித்து நொறுக்கிய பாலிவுட் நடிகை

 

சில்மிஷம் செய்த ஆசாமிகளை அடித்து நொறுக்கிய பாலிவுட் நடிகை

அத்துமீறி நடந்துக் கொள்ள முயற்சித்த நபர்களை பாலிவுட் நடிகை ஸரீன் கான் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

மும்பை: அத்துமீறி நடந்துக் கொள்ள முயற்சித்த நபர்களை பாலிவுட் நடிகை ஸரீன் கான் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் கடை திறப்பு விழாவில் பங்கேற்க நடிகை ஸரீன் கான் வந்துள்ளார். அப்போது அவரை காண குவிந்த ரசிகர்கள் கூட்டத்தில் சிலர், ஸரீன் கான் மீது தவறாக கை வைக்க முயற்சித்துள்ளனர்.

zareenkhan

இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை ஸரீன் கான், தன்னிடம் தவறாக நடக்க முயன்றவர்களை ஆக்கிரோஷமாக தள்ளிவிட்டு அடித்து தாக்கிவிட்டு காரில் ஏறிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. சில்மிஷம் செய்தவர்களை பொது இடம் என்றும் பாராமல் தாக்கிவிட்டு துணிச்சலாக சென்ற ஸரீன் கானை ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் பாராட்டி வருகின்றனர்