சிறை தண்டனை விதிக்கப்பட்ட அமைச்சர் முதல்வருடன் அவசர ஆலோசனை

 

சிறை தண்டனை விதிக்கப்பட்ட அமைச்சர் முதல்வருடன் அவசர ஆலோசனை

3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, முதல்வர் பழனிசாமியை அவரது சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை: 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, முதல்வர் பழனிசாமியை அவரது சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கடந்த 1998-ம் ஆண்டு கள்ளச்சாரயம் வியாபாரத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கல் வீசி தாக்குதல் நடத்தியதாக, தற்போதைய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி  உள்ளிட்ட 108 பேர் அரசு வழக்கு தொடரப்பட்டது.

ஒசூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டது. 

இந்த நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், ரூ 10,500 அபராதம் விதித்தும் உத்தரவிட்டது.

அதனையடுத்து, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ள அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.