சிறையில் இருந்த அம்மாவை ஜாமீனில் எடுத்த கவின்

 

சிறையில் இருந்த அம்மாவை ஜாமீனில் எடுத்த கவின்

பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறிய கவின், சிறையிலிருந்த தனது தாயை ஜாமீனில் எடுத்துள்ளார்.

பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறிய கவின், சிறையிலிருந்த தனது தாயை ஜாமீனில் எடுத்துள்ளார்.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் காதல் மன்னனாக வலம் வந்த  கவின் வீட்டுக்குள் பல்வேறு பிரச்னைகளை  உருவாக்கி அதில் அவரே பலிகடா ஆக்கப்பட்டார். இருப்பினும் மனம் தளராமல் இருந்து வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் கொடுத்த 5 லட்சம் ஆபர் பணத்துடன் வீட்டை  விட்டு வெளியேறினார். 

kavin

இதனிடையே கவினின் தயார் ராஜலட்சுமி சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்ததற்கான வழக்கு, கடந்த 29 ஆம் தேதி திருச்சி நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் கவின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட இரண்டு ஆண்கள் சம்மந்தப்பட்டிருந்தனர். அதில் இரண்டு பேர்கள் இறந்துள்ளதால் மீதமிருக்கும் மூன்று பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் மோசடி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கவின் தாய் ராஜலட்சுமி, பாட்டி  தமயந்தி ஆகியோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.மேலும் 2007 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த  வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சேர வேண்டிய 29 லட்சம் ரூபாயை திருப்பி தரவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

kavin

இதையடுத்து தாய் கைதான விவகாரம் கவினுக்கு தெரியாத நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வந்த அவர் தாய் கைதாகி சிறையில் இருக்கும் செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் அவரை ஜாமீனில் எடுக்கும் முயற்சியில் இறங்கிய கவின், தற்போது அவர்களை ஜாமீனில் எடுத்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கவேண்டிய பணத்தை கொடுப்பதாகக் கவின் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.