சிறுவனை அடைத்து வைத்து 4 நாட்கள் பாலியல் தொந்தரவு தந்த ஆசிரியை: மதுரையில் பரபரப்பு!
16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை: 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
சமீபகாலமாக பாலியல் வன்கொடுமை விவகாரங்கள் தலைவிரித்து ஆடுகிறது என்றே சொல்லலாம். குறிப்பாகப் பள்ளி ஆசிரியர்களே மாணவர்கள் மீது நடத்தும் வன்கொடுமை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த நிர்மலா என்ற ஆசிரியை அங்குள்ள பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அதே சமயம் அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு, டியூசன் எடுத்தும் வந்துள்ளார்.
4 நாட்களாக பாலியல் தொந்தரவு
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனை கட்டாயமாக அழைத்து சென்ற ஆசிரியை நிர்மலா, 4 நாட்களாக ஒத்தக்கடையில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமையைச் சிறுவன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஆசிரியை நிர்மலாவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து ஆசிரியை நிர்மலாவின் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆசிரியை நித்யா கைது
முன்னதாக டியூசன் என்ற பெயரில் மாணவர்களை வரவழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியை திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆசிரியை நித்யா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிர்ச்சியில் பெற்றோர்கள்
மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆசிரியரே பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்க: தனுஷுக்கு வில்லனாகும் பிரபல தெலுங்கு பட நடிகர்!