சிறுமியிடம் சில்மிஷம்… தண்டனை நிச்சயம் என்று வழக்கறிஞர் கூறியதால் தற்கொலை செய்த தொழிலாளி!

 

சிறுமியிடம் சில்மிஷம்… தண்டனை நிச்சயம் என்று வழக்கறிஞர் கூறியதால் தற்கொலை செய்த தொழிலாளி!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தண்டனை கிடைப்பது உறுதி என்று வழக்கறிஞர் கூறியதால் மனமுடைந்த தொழிலாளி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் காவலன் கேட் அருகே உள்ள வளத்தீஸ்வரன் கோயில் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவர் அந்த பகுதியில் உள்ள ஹோட்டலில் பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியிடம் விளையாடிய அவர், யாரும் இல்லாத நேரத்தில் அந்த சிறுமியிடம் பாலியல் வன்முறை செய்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் கூறவே, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தண்டனை கிடைப்பது உறுதி என்று வழக்கறிஞர் கூறியதால் மனமுடைந்த தொழிலாளி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் காவலன் கேட் அருகே உள்ள வளத்தீஸ்வரன் கோயில் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவர் அந்த பகுதியில் உள்ள ஹோட்டலில் பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியிடம் விளையாடிய அவர், யாரும் இல்லாத நேரத்தில் அந்த சிறுமியிடம் பாலியல் வன்முறை செய்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் கூறவே, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

image

போக்ஸோ சட்டத்தின் கீழ் கோடீஸ்வரனைக் கைது செய்த போலீசார் அவரை  சிறையில் அடைத்தனர். அவருக்கு ஜாமீன் வழங்கவே பல மாதங்கள் ஆகிவிட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் அவர் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகும்போது எல்லாம், தனக்கு தண்டனை கிடைக்குமா என்று தன்னுடைய வழக்கறிஞரிடம் கேட்டுவந்துள்ளார் கோடீஸ்வரன். தொடக்கத்தில் முயற்சி செய்து பார்ப்போம் என்ற வழக்கறிஞர், கடைசியாக சிறுமியின் வாக்குமூலம், மருத்துவ பரிசோதனை என எல்லாம் உறுதியாக உள்ளது. அதனால், தண்டனை கிடைப்பது நிச்சயம் என்று கூறியுள்ளார்.

image

இதனால், கோடீஸ்வரன் மனமுடைந்து போயுள்ளார். யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார். வழக்கிலிருந்து தப்ப முடியாது, நிச்சயம் தண்டனை கிடைக்கும், வாழ்நாள் முழுவதும் சிறையில்தான் இருக்க வேண்டும் என்று புலம்பிவந்த கோடீஸ்வரன், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்பேட்டு தற்கொலை செய்துகொண்டார்.

death

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். சிறுமியிடம் பாலியல் வன்முறை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், கோடீஸ்வரன் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.