சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தும் பணி 50 நாட்களில் முடிக்கப்பட வேண்டும்! ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற மத்திய அரசு உத்தரவு!!

 

சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தும் பணி 50 நாட்களில் முடிக்கப்பட வேண்டும்! ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற மத்திய அரசு உத்தரவு!!

கொரோனா முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை ஆண்டு இறுதி தேர்வு இல்லாமல் பாஸ் செய்தற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தரவிட்டார். ஒன்பதாவது மற்றும் பதினொறாவது படிக்கும் மாணவர்களை, இந்த கல்வி ஆண்டு நடைபெற்ற பருவ தேர்வுகள் முடிவுகளின் படி அடுத்த வகுப்புகளுக்கு பாஸ் செய்யவும் உத்தரவிடப்பட்டது. பல்வேறு தரப்பினர் பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இந்த நிலையில், ஜூலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டிருப்பதாக என மத்திய மனித வளத்துறை தெரிவித்துள்ளது.

ttn

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் வீட்டிலிருந்து செய்ய வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணி 50 நாட்களில் முடிக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.