“சின்னபுள்ளைகள…ரேப் பண்ணுவியா…?”… “பண்ணக்கூடாதுண்ணே…!”கடந்த ஒரு வாரமாக கதறிய வாலிபர் யார் என்பது தெரிந்தது!

 

“சின்னபுள்ளைகள…ரேப் பண்ணுவியா…?”… “பண்ணக்கூடாதுண்ணே…!”கடந்த ஒரு வாரமாக கதறிய வாலிபர் யார் என்பது தெரிந்தது!

கடந்த ஒரு வாரமாகவே வாட்ஸ் அப்பில் வலம் வந்த இந்த வீடியோ குறித்தும்,யார் அதை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார்கள் என்பது தெரியாமல் குழப்பத்தில் இருந்த திருச்சி காவல்துறையினர் அது குறித்த ரகசியமாக விசாரணையில் இறங்கியது.  

கடந்த வாரம் ஒரு வீடியோ வைரல் ஆனது.அந்த வீடியோவில் ஒரு இளைஞன் பலத்த காயங்களுடன்,சட்டை,பேண்ட் எல்லாம் கிழிந்த நிலையில் கதறி அழும் காட்சி பதிவாகியிருந்தது.அந்த வீடியோவை எடுத்த நபர்தான் அந்த இளைஞனை கடுமையாக தங்கியிருக்க வேண்டும்! அந்த வீடியோவில் ‘சின்னப்புள்ளைகள என்ன பண்ணக்கூடாது…’ என்று கேள்வி கேட்பார்… ’பாலியல் பலாத்காரம் செய்யக்கூடாதுண்ணே’ என்று அழுதபடியே அந்த இளைஞன் பயந்தபடி பதில் சொல்லுவான்.

கடந்த ஒரு வாரமாகவே வாட்ஸ் அப்பில் வலம் வந்த இந்த வீடியோ குறித்தும்,யார் அதை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார்கள் என்பது தெரியாமல் குழப்பத்தில் இருந்த திருச்சி காவல்துறையினர் அது குறித்த ரகசியமாக விசாரணையில் இறங்கியது.  

திருச்சி பாலக்கரை

சிறுமிகள் முதல் பல பெண்களின் வாழ்க்கையை சூறையாடியதாக ஒப்புதல்  வாக்குமூலம் கொடுத்த இளைஞன் பற்றி இப்போது தகவல் கிடைத்திருக்கிறது! திருச்சி பாலக்கரை போலீசார் நடத்திய விசாரணையில்,பீமநகர் பகுதியில் குடியிருந்த,புதுக்கோட்டை மாவட்டம்  மாத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிவேல் என தெரியவந்துள்ளது.

இதுவரை 50-கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.இதையடுத்து,மணிவேலை பிடிக்க காவல் ஆய்வாளர் சுரேந்திரன் தலைமையில் தனிப்படையை அமைத்து திருச்சி  போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிவேல் பிடிபட்டதும் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

ஆனால்,சம்பந்தப்பட்ட வீடியோவை வெளியிட்ட நபர் யார் என்பது குறித்து காவல்துறை வட்டாரத்தில் தகவல் எதுவும் இல்லை! இவ்வளவு பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தும்,இதுவரை யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!