சின்னத்திரையில் வெடித்த மீ டூ: நாட்டாமை டீச்சர் எழுப்பும் பாலியல் புகார்!

 

சின்னத்திரையில் வெடித்த மீ டூ: நாட்டாமை டீச்சர் எழுப்பும் பாலியல் புகார்!

ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட்டை தொடர்ந்து சின்னத்திரை நடிகைகளும் மீ டூ விவகாரம் குறித்து பேசத் தொடங்கியுள்ளனர்.

சென்னை: ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட்டை தொடர்ந்து சின்னத்திரை நடிகைகளும் மீ டூ விவகாரம் குறித்து பேசத் தொடங்கியுள்ளனர்.

மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வர தொடங்கியுள்ளது. ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த மீ டூ விவகாரத்தில் ஏராளமான பிரபலங்கள் பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சின்னத்திரையிலும் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாக கூறப்படுகிறது. பிரபல தொலைக்காட்சியின் முன்னணி சீரியலில் ஷூட்டிங்கின் போது நடிகர் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ராணி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் சண்முகராஜன், பிரபல சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். அவருடன் சேர்ந்து ‘நாட்டாமை’ படத்தில் டீச்சராக நடித்த நடிகை ராணியும் அந்த சீரியலில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் சென்னை செங்குன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஷூட்டிங்கின் போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் சண்முகராஜன் மற்றும் இயக்குநர் ராஜ்கபூர் மீது நடிகை ராணி செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தமிழ் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.