சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு எதுவும் செய்ய போவதில்லை! ஆவேசமடைந்த அரசியல் தலைவர்!

 

சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு எதுவும் செய்ய போவதில்லை! ஆவேசமடைந்த அரசியல் தலைவர்!

ரஜினி, கமல் சினிமா வசனங்களைக் கேட்டு எனக்கு அலுத்துப் போய் விட்டது. இந்த சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு எதுவும் செய்யப் போவதில்லை என்று சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார். இன்று சென்னை விமான நிலையத்தில் சுப்பிரமணிய சுவாமி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில், சினிமா கூத்தாடிகள் தமிழ்நாட்டுக்காக ஒன்றும் செய்ய முடியாது.

ரஜினி, கமல் சினிமா வசனங்களைக் கேட்டு எனக்கு அலுத்துப் போய் விட்டது. இந்த சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு எதுவும் செய்யப் போவதில்லை என்று சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார். இன்று சென்னை விமான நிலையத்தில் சுப்பிரமணிய சுவாமி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில், சினிமா கூத்தாடிகள் தமிழ்நாட்டுக்காக ஒன்றும் செய்ய முடியாது. அவருடைய திரைப்படம் வெளியீடு நெருங்குவதால் பப்ளிசிட்டிக்காக இதையெல்லாம் செய்யலாம். நான் அரசியலுக்கு வருவேன் என இதுவரையில் ரஜினி எத்தனை தடவை கூறியிருக்கிறார்? ஆனால், கடைசியில் ஒன்றும் நடக்கவில்லை. ரஜினி, கமலின் சினிமா வசனங்களைக் கேட்டு எனக்கு அலுத்துப் போய் விட்டது என்றார். 

subramaniya samy

மேலும், சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என தகவல் வருகிறதே என்று நிருபர்கள் கேள்வியெழுப்பியதற்கு, அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அவரை சிறைக்கு அனுப்பியதில் என்னுடைய வழக்கும் இருந்தது. அவரின் தண்டனைக் காலம் முடிவதற்கே இன்னும்  ஒரு வருடம் தான் இருக்கிறது என்று பதிலளித்த சுப்பிரமணிய சுவாமி, சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவினர் கட்டாயம் சசிகலா கட்சியில் தான் இணைவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும், கட்சியை நல்ல அமைப்புடன் நடத்துவதற்கான திறமை சசிகலாவிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.