‘ சிங்கம் களமிறங்கிடுச்சு’ : சென்னையில் நாளை முதல் விஜயகாந்த் பிரசாரம்: உற்சாகத்தில் தொண்டர்கள்!
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் நாளை பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் நாளை பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நெருங்கி வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதால், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த், விஜய் பிரபாகரன் உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஆனால் சென்ற தேர்தலில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்ட தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், உடல்நலக் குறைவால் வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்துவருகிறார்.
நாளை வடசென்னை தேமுதிக வேட்பாளர் திரு அழகாபுரம் மோகன்ராஜ் அவர்களுக்கு #முரசு, மத்திய சென்னை பா.ம.க வேட்பாளர் திரு சாம்பால் அவர்களுக்கு #மாம்பழம் & தென் சென்னை அதிமுக வேட்பாளர் Dr ஜெயவர்தன் அவர்களுக்கு #இரட்டைஇலை சின்னங்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொள்ள உள்ளேன். pic.twitter.com/Md3bSVmpkL
— Vijayakant (@iVijayakant) April 14, 2019
இந்நிலையில் , விஜயகாந்த் டிவிட்டர் பக்கத்தில், ‘நாளை வடசென்னை தேமுதிக வேட்பாளர் திரு அழகாபுரம் மோகன்ராஜ் அவர்களுக்கு #முரசு, மத்திய சென்னை பா.ம.க வேட்பாளர் திரு சாம்பால் அவர்களுக்கு #மாம்பழம் & தென் சென்னை அதிமுக வேட்பாளர் Dr ஜெயவர்தன் அவர்களுக்கு #இரட்டைஇலை சின்னங்களை ஆதரித்துத் தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொள்ள உள்ளேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக் கடந்த பிப்ரவரியில் சென்னை திரும்பிய விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார் என்ற செய்தி தேமுதிக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.