சிக்கன் பக்கோடா கொடு: போதையில் சிறுமியை அடித்து கொலை செய்த கொடூரன்! 

 

சிக்கன் பக்கோடா கொடு: போதையில் சிறுமியை அடித்து கொலை செய்த கொடூரன்! 

சிக்கன் பக்கோடா கேட்டு அடம்பிடித்தற்காக சிறுமியை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர்: சிக்கன் பக்கோடா கேட்டு அடம்பிடித்தற்காக சிறுமியை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த மதுரா கொத்தியம்பாக்கத்தில் ஹாலோபிளாக் கற்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கி, வேலை செய்து வருகின்றனர். 

அவர்களில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அமீர் எனபர் தனது மனைவி மற்றும் 4 வயது மகளுடன் வசித்து வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அமீரின் உறவினர் நிலக்கர் என்ற இளைஞருடன் சிறுமி வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

இதுதொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர்கள் அவனிடம் விசாரித்துள்ளனர். ஆனால் மது போதையிலிருந்த நிலக்கர் சிறுமி குறித்து எதுவும் தெளிவாகச் சொல்லவில்லை. இதனால் மீண்டும் பல இடங்களில் சிறுமியை தேடி  பெற்றோர்கள் அலைந்துள்ளனர். இப்படி  பல இடங்களில் தேடியும் சிறுமியும் கிடைக்கவில்லை. பிறகு   திங்கட்கிழமை காலையில் ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலை பின்புறம், உடலில் காயங்களுடன்  சிறுமி  சடலமாக கிடந்தாள். இதைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனே வெள்ளவேடு காவல்நிலையத்திற்குப் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்த சிறுமியின் உடலை மீட்டு மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

mann

இதுதொடர்பான விசாரணையில் சிறுமி தவறி விழுந்து இறந்துவிட்டதாக நிலக்கர் கூறியுள்ளார். அவர் சொன்னதை உண்மை என நம்பி காவல்துறையினர் வழக்கை முடிக்க முடிவு செய்தனர். பின்னர் பிரேத பரிசோதனை முடிவுகள் வேறு விதமாக இருந்தன. இதனால் நிலக்கரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். 

man

அப்போது தான் அதில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தனது கூட்டாளிகள் 3 பேருடன்  சிறுமியை, டாஸ்மாக் கடைக்கு நிலக்கர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மது அருந்தி விட்டு, சிக்கன் பக்கோடா வாங்கி வந்துள்ளார். அப்போது வரும் வழியில் சிறிய பாலம் ஒன்றின் மீது அமர்ந்து, நிலக்கர் பகோடாவைச் சாப்பிட்டுள்ளான். ஆசையாக இருந்தால் பக்கோடா கேட்டு சிறுமி அடம் பிடித்துள்ளார். ஆனால் நிலக்கர் தராததால்,ஆத்திரமடைந்த அந்த சிறுமி அவரின் கையை கடித்துள்ளார். 

உடனே மது போதையிலிருந்த நிலக்கர் சிறுமியை அடித்துக் கொலை செய்துள்ளான். பின்னர் மறைவான இடத்தில் உடலை தூக்கி வீசி எறிந்துள்ளான். இதையடுத்து நிலக்கரை கைது செய்த காவல்துறையினர் அவனை புழல் சிறையில் அடைத்தனர். சிக்கன் பக்கோடா வுக்காக 4 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.