சாலையில் படுத்துறங்கிய யானை! வைரலாகும் புகைப்படம்!!

 

சாலையில் படுத்துறங்கிய யானை! வைரலாகும் புகைப்படம்!!

தாய்லாந்தில் நெடுஞ்சாலையின் நடுவில் யானை ஒன்று படுத்து உறங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. நாகோன் ராட்சசிமா என்ற இடத்தில் ங்கா-தொங் என்ற  குட்டி யானை ஒன்று களைப்பின் காரணமாக சாலையில் படுத்துறங்கியது. அவ்வழியே காரை ஓட்டியபடி வந்த, நட்டாவட் பட்சுங்சிங் என்ற முதியவர் ஒருவர், அதைப் படம்பிடித்தார். தான் உரிய நேரத்துக்குப் பணிக்குச் செல்ல வேண்டுமாதலால், பிளீஸ் ங்கா-தொங் எனக்கு வழிவிடு என அதனிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் அதை காதில் வாங்காத குட்டியானை அசந்து தூங்கி கொண்டிருந்தது. 20 நிமிடங்களுக்குப் பின் அந்த யானை எழுந்து முதியவருக்கு வழிவிட்டது. அதன்பின் அந்த முதியவர் தன் வாகனத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.