சாலையில் கேட்பாரற்று கிடந்த வாக்குப்பதிவு இயந்திரம்: இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட்!

 

சாலையில் கேட்பாரற்று கிடந்த வாக்குப்பதிவு இயந்திரம்: இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட்!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராஜஸ்தானில் சளியில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராஜஸ்தானில் சளியில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. மொத்தம் 199 தொகுதிகளில் 52,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பு மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

அதைத்தொடர்ந்து, தேர்தல் தொடர்பான வாக்கு கணிப்புகளை பல்வேறு அமைப்புகள் வெளியிட்டன. இதுதொடர்பான செய்திகளின் பரபரப்பு ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருந்த சமயத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகும் மற்றொரு விஷயமும் தெரியவந்தது. அதாவது பாரன் மாவட்டம், கிஷான்கஞ்ச் தொகுதிக்கு உள்பட்ட சஹாபாத் என்ற இடத்தில் வாக்குப்பதிவு இயந்திரம்,சாலையில் கேட்பாரற்று கிடந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், தேர்தல் அதிகாரிகள் விரைந்து வந்து இயந்திரத்தைக் கைப்பற்றி கொண்டு சென்றனர். மிகவும் அலட்சியத்துடன் செயல்பட்டு அந்த இயந்திரத்தைத் தொலைப்பதற்கு காரணமாக இருந்த இரண்டு அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.