சாகப்போற கிழவியை தூக்கி வந்து… சந்தோஷப்படும் ஹெச்.ராஜா..!

 

சாகப்போற கிழவியை தூக்கி வந்து… சந்தோஷப்படும் ஹெச்.ராஜா..!

இண்டர்போலுக்கு அழுத்தம்கொடுத்து இந்துகுஷ் மலையைக் குடைந்து அவரை அரஸ்ட் செய்ய வைத்துவிட்டதைப் போலவும், “ஆபரேஷன் சக்சஸ்,” என்றெல்லாம் பில்டப் கொடுக்கிறார்கள்.

நெல்லை கண்ணன் பல சமயங்களில் கலைஞரை ஒருமையில் பேசி இருக்கிறார். சாதி குறிப்பிட்டு பேசுவது திராவிட இயக்கம் சாராத தமிழறிஞர்கள் பெரும்பாலானோர்க்கு அல்வா சாப்பிடுவதைப் போல. அவரும் விதிவிலக்கல்ல. 

அவர் பேச்சுகள் பெரும்பாலும் அரசியல்ரீதியாக தவறாகவே இருக்கும். கருத்து மட்டுமல்ல, தொனியும் கூட. ஆனால் காலம்போன காலத்தில் இப்போதுதான் சமீபகாலமாக கொஞ்சம் நன்றாகப் பேசிவந்தார். அதுகூட ஒரு ஒழுங்கான காங்கிரஸ்காரராக! அவர் இஸ்லாமியர்களை வைத்துக்கொண்டு பேசியதுகூட பொதுப்புத்தியில் இருந்து வெளிப்பட்ட பேச்சு. நியாயமாக அவர் பேச்சுக்கு இஸ்லாமிய நண்பர்கள்தான் கோபம் கொள்ள வேண்டும். ஏனெனில் மோடியைப் பற்றியோ, அமித்ஷாவைப் பற்றியோ அவர்கள் செய்யாததை ஒன்றும் அவர் பேசிவிடவில்லை. Nellai kannan

ஆனால் இஸ்லாமிய நண்பர்கள் ஆளறிந்து, நோக்கமறிந்து பெருந்தன்மையாக நடந்துகொண்டார்கள். ஆனால் பாருங்கள், இந்திய அளவில் பெரிய வில்லனாக இருக்கும் பாஜககாரர்கள் தமிழ்நாட்டில் கரடிகளே காறித்துப்பும் அளவுக்கு காமடி பீஸ்களாக இருப்பதால், “அடிக்க ஏப்பசாப்பையாக எவன் கிடைப்பான்?” என்ற ரீதியிலேயே அலைகிறார்கள். அவர்கள் கையில் பாவம் நெல்லைக் கண்ணன் மாட்டியிருக்கிறார். 

இவர்களை பெரிய வில்லன்களாகக் காட்டிக்கொள்ள நெல்லைக் கண்ணனை ஏதோ ஒசாமா பின்லாடனின் மச்சான் போலவும், இண்டர்போலுக்கு அழுத்தம்கொடுத்து இந்துகுஷ் மலையைக் குடைந்து அவரை அரஸ்ட் செய்ய வைத்துவிட்டதைப் போலவும், “ஆபரேஷன் சக்சஸ்,” என்றெல்லாம் பில்டப் கொடுக்கிறார்கள்.nellai kannan

எச்.ராஜாவைப் பார்த்தால், கைப்புள்ள வடிவேலுவின் மூஞ்சியில் ஆரத்தியைக் கரைத்து ஊற்றும் கிழவியைப் பார்த்து, “ம்ம்ம்ம்னு சொல்லு தல. தூக்கிரலாம்,” என வடிவேலுவின் அடியாள் சொல்வார். அவரை நாலு அறை அறைந்துவிட்டு, “ஏன்டா அங்க என்ன நாலு பேர் பொரட்டி பொரட்டி அடிச்சாய்ங்க. அப்பல்லாம் சும்மா இருந்துட்டு, நாளைக்கு சாகப்போற கிழவிய தூக்கிறலாங்குற…” எனக் கேட்பார். அந்த காட்சிதான் நினைவுக்கு வருகிறது.