சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்: திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அட்சயா மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம், திராவிட மாற்றுத் திறனாளிகள் சங்கம், தி.மு.க. பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சங்கம் ஆகிய சங்கங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இடஒதுக்கீடு வேலைவாய்ப்பு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் மாற்றுத் திறனாளிகள், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மு.க. ஸ்டாலினை சந்தித்ததாக தெரிவித்தனர்.
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, கழக தலைவர் அவர்கள்,200க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.#WorldDifferentlyAbledDayhttps://t.co/D4HKCkCwFM pic.twitter.com/HCKuo0Cm11
— DMK – Dravida Munnetra Kazhagam (@arivalayam) December 3, 2018
அதன்பின், 200க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.