சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தமிழக வீரர் பத்ரிநாத் ஓய்வு

 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தமிழக வீரர் பத்ரிநாத் ஓய்வு

சென்னை: தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர்களுக்கு அனுமதி அதிகளவில் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. ஆனால், அப்போதும் மனம் தளராமல் தங்கள் திறமையை நிரூபிக்கும் வீரர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட தமிழக கிரிக்கெட் வீரர்களில் முதன்மையானவர் பத்ரிநாத் ஆவார்.

சென்னையை சேர்ந்த பத்ரிநாத் கடந்த 2010ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இவர் இந்திய அணிக்காக 2டெஸ்ட், 7 ஒருநாள்ஒரே ஒரு டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மாநிலங்களுக்கு இடையில் நடக்கும் ரஞ்சி கோப்பையில் ஏழாயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார் பத்ரிநாத். அதே சமயம் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ள பத்ரிநாத் 95 போட்டிகளில்1441 ரன்களை குவித்துள்ளார். 38 வயதான பத்ரிநாத் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.