சர்கார் பட விவகாரம்: ஏ.ஆர்.முருகதாஸிற்கு முன் ஜாமீன்

 

சர்கார் பட விவகாரம்: ஏ.ஆர்.முருகதாஸிற்கு முன் ஜாமீன்

சர்கார் திரைப்படம் தொடர்பான வழக்கில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிற்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சர்கார் திரைப்படம் தொடர்பான வழக்கில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிற்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படத்தில், தமிழக அரசின் இலவச திட்டங்களை தவறாக சித்தரித்ததாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்விவகாரத்தில் தன்னை கைது செய்யக் கூடாது என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

sarkar

இம்மனு மீதான விசாரணையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிற்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவரை 6 வாரங்களுக்கு கைது செய்யக் கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. விசாராணைக்கு தேவைப்படும் போது மத்திய குற்றப்பிரிவு முன் ஆஜராக வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக தமிழக அரசை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்ற அரசின் நிபந்தனையை இயக்குநர் முருகதாஸ் ஏற்கனவே மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.