சர்கார் டிக்கெட் முன்பதிவு: விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி!

 

சர்கார் டிக்கெட் முன்பதிவு: விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி!

தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் டிக்கெட் முன்பதிவின் போது விஜய் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் டிக்கெட் முன்பதிவின் போது விஜய் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (நவ.6) உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில், டிக்கெட்களை வாங்க தளபதி ரசிகர்கள் திரையரங்கு வாசலில் தவம் இருந்து டிக்கெட்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில், கூடுவாஞ்சேரியில் உள்ள திரையரங்கில் சர்கார் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. இதையடுத்து, ஏராளமான ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர், ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் டிக்கெட் வாங்கும்போது ரசிகர்களிடயே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்தி தள்ளுமுள்ளு பிரச்னையை சமாளிக்க போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். போலீசார் தடியடியில் இருந்து தப்பிக்கு ரசிகர்கள் சிதறி ஓடியதையடுத்து அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.